Wednesday 30 July 2008

1990ஆம் ஆண்டுகளில் படையினரால் கைதுசெய்யப்பட்டு காணாமல்போனோர் படைமுகாமில் கொத்தடிமைகளாக ?

மட்டக்களப்பு –அம்பாறை மாவட்டங்களில் 1990ஆம் ஆண்டுகளில் படையினரால் கைதுசெய்யப்பட்டு காணாமல்போனதாக கூறப்படுவோரில் சுமார் 100பேர் மகரஹம பிரதேசத்துக்குட்பட்ட கோமாகம என்னுமிடத்தில் உள்ள இராணுவ முகாமில் பணயக்கைதியாக வைக்கப்பட்டுள்ளதாக அதில் இருந்து தப்பிவந்ததாக கூறும் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பை சேர்ந்த இவர் தன்னுடன் இப்பகுதிகளை சேர்ந்த சுமார் 100பேர் உள்ளதாகவும் இவர்கள் அனைவரும் கடும் சித்திரவதைகளுடன் தோட்டவேலைகளுக்காக பயன்படுத்தப்பட்டுவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தான் அப்படை முகாமின் உயர் அதிகாரி ஒருவரின் வீட்டில் வேலை செய்ததாகவும் அப்போது தனது குடும்ப நிலையை அடிக்கடி அவருக்கு தெரியப்படுத்தியபோது அவர் தன்மீது கொண்ட விசுவாசம் காரணமாகவே தன்னை தப்பிச்செல்ல அனுமதித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அப்பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றின் குருவை அனுகி இது தொடர்பில் தெரிவித்ததாகவும் இது தொடர்பாக மீதமுள்ளோரை விடுவிக்க தான் நடவடிக்கை எடுப்பதாகவும் குறித்த குரு தன்னிடம் உறியளித்துள்ளதாகவும் குறித்த தப்பிவந்த நபர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கோட்டைக்கல்லாறு பகுதிக்குவந்த குறித்த தப்பிவந்த நபர் இப்பகுதியில் காணாமல்போன ஒருவரின் வீட்டுக்கு சென்று தன்னுடன் குறித்த இளைஞனும் முகாமில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் உறுதிப்படுத்த உறுதியான ஆதாரங்கள் இல்லாத நிலையிலும் முரசு இது தொடர்பில் ஆராய விளைந்துள்ளதுடன் இது தொடர்பில் அவதானம் மேற்கொண்டுவருகின்றது.

No comments: