Wednesday 30 July 2008

தேர்தல்களை வெற்றி கொள்வதற்கு யுத்தவாதம் பிரசாரமாக கையாளப்படுகிறது -இடதுசாரி முன்னணி தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ண

தேர்தல்களை வெற்றி கொள்வதற்கு யுத்தவாதம் பிரசாரமாக கையாளப்படுகின்றது. தேர்தலுக்காக யுத்தமும் யுத்தத்திற்காக தேர்தலும் என்ற நிலையே தற்போது தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் யுத்த வெற்றிகள் அனைத்தும் போலியானவை. உண்மையான வெற்றியை யுத்தத்தினு}டாக பெறமுடியாது. என்று இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ண தெரிவித்துள்ளார்.

யுத்தமாக இருந்தாலும் சரி, தேர்தலாக இருந்தாலும் சரி பொதுமக்கள் ஏமாற்றப்படுகின்றனர் என்பதே உண்மை.

அரசினதும், ஜனாதிபதியினதும் ஒரேநோக்கம் தேர்தல்களை வெற்றிகொள்வது மட்டுமே. அதற்காக எதனையும் செய்ய அரசு தயாராக இருக்கிறது.

எதிர்க்கட்சிகளை வசைபாடி கள்ளவாக்குகளால் பெட்டிகளை நிரப்பி கொள்வதற்கான முன் ஆயத்தங்களை நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறது. என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments: