Wednesday 30 July 2008

சிங்கள புலானாய்வுத்துறையின் வலையில்?

புலத்தில் இருந்து இயங்கும் ஈழத்தமிழர்களின் ஊடகங்களை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர சிங்கள புலனாய்வுத்துறை முழு வீச்சில் ஈடுபட்டிருப்பதாக, ஐரோப்பாவில் இருந்து ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி ஒன்றின் பெயர் குறிப்பிட விரும்பாத முக்கிய செய்தி அறிவிப்பாளர் ஒருவர் நெருப்புக்கு தெரிவித்திருக்கிறார்.

அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது:

கடந்த காலங்களிலும் இதே போன்ற பல முயற்சிகளை சிங்கள புலனாய்வுத்துறை எடுத்த நிலையிலும், தோல்வியிலேயே இம்முயற்சிகள் முடிவுற்றன.

ஆனால் சில வருடங்களுக்கு முன் பிரான்ஸிலிருந்து இயங்கும் வங்குரோத்து ஊடகங்களான ரி.ஆர்.ரி வானொலி-தொலைக்காட்சி, ஈழநாடு பத்திரிகை என்பன குகநாதனினால், சிங்கள புலனாய்வுத்துறை எறிந்த பிச்சைக் காசுக்காக மண்டியிட்டது.

ஆனால் தற்போது லண்டனிலிருந்து இயங்கும் தொலைக்காட்சி ஒன்றையே சிங்கள புலனாய்வுத்துறை இலக்கு வைத்து காய்களை நகர்த்துவதாக தெரிகிறதாம்.

அண்மைய வாரங்களாக 'புலிப் புராணம்' உரத்துப் பாடும் இந்த தொலைக்காட்சி, இடையிடையே விசங்களையும் கக்கி புலத்தமிழர்களை குழப்பத்திற்கு இட்டுச் செல்லவும் முற்படுகிறதாம். ஒவ்வொரு முறையும் இவற்றை நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தால், நிவர்த்தி செய்யப்படுவது போன்று சில நாட்களுக்கு மீண்டும் புலிப்புராணமாம். ஆனால் மீண்டும் வேதாளம் முருக்கை மரத்தில் ஏறி விடுமாம்.

இத்தொலைக்காட்சியானது கடந்த காலங்களில் நடுநிலையாக செயற்படுகிறோம் என்று ஆடிய நாடகமே, சிங்கள புலனாய்வுத்துறையானது தம் வலையில் வீழ்த்தலாம் என கருதியதாம்.

இவற்றுக்கு மேல் இத்தொலைக்காட்சியின் சில செய்தியாளர்கள் கொழும்பிலிருந்து செயற்படுவதால், அவர்களுக்கு அழுத்தங்கள் கொடுக்க ஆரம்பித்திருப்பதாக நம்பககரமாக தெரிகிறது.

இத்தொலைக்கட்சி நிர்வாகமோ தளம்பிய நிலையில் இருப்பதாகவும் தெரிகிறது.

எம் மக்களை கொண்றொளித்து, எமது வாழ்வாதாரங்களை நாசமாக்கி இனப்படுகொலையை நடத்தி வரும் சிங்களை ஆதிக்கத்தின் செயற்பாடுகளை நியாயப்படுத்த எமக்கு இந்த தொலைக்காட்சி தேவையா?

இத்தொலைக்காட்சியின் சந்தாதாரர்களே, இத்தொலைக்கட்சி சிங்களத்தின் கைகளில் வீழ்வதை தடுக்க உங்களால்தான் முடியும். உங்கள் அழுத்தங்களை நிர்வாகத்திற்கு கொடுங்கள்.

இல்லை, அவர்களுக்கு உங்கள் மொழி புரியவில்லையாயின், நீங்கள் வெளியேறுங்கள். சமூக நலனில் அக்கறை கொண்ட ஊடகமான நெருப்பு உங்களோடு நிற்கும். இதனை தடுக்க மாட்டோமாயின், எதிர்காலத்தில் ஏனைய ஊடகங்களும் சிங்களம் விரிக்கும் சதி வலையில் வீழ்வதை தடுக்க முடியாது.

விரைவில் நெருப்பானது இத்தொலைக்காட்சியில் ஊடுருவியிருக்கும் சிங்களத்தின் கூலிகளை அம்பலப்படுத்த இருக்கிறது.

http://www.neruppu.org/index.php?subaction=showfull&id=1217283441&archive=&start_from=&ucat=1&

No comments: