Thursday 31 July 2008

மணலாற்றில் புலிகளின் ஆட்டிலறித் தாக்குதலில் பெல் 212 ரக உலங்கு வானூர்தி கடும் சேதம்

மணலாற்றுப் பகுதியில் சிறிலங்காப் வான் படையினருக்குச் சொந்தமான பெல் 212 ரக உலங்கு வானூர்தி ஒன்று விடுதலைப் புலிகளின் ஆட்டிலறி எறிகணையில் சிக்கி கடும் சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது.

மணலாற்றுப் பகுதியில் இடம்பெற்ற மோதல்களின் போது காயமடைந்த படையினரை அநுராதபுர மருத்துவமனைக்கு ஏற்றி இறக்கும் பணியில் ஈடுபட்ட இந்த உலங்கு ஈடுபட்டுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை விடுதலைப் புலிகளின் ஆட்டிலறித் தாக்குதலுக்கு உள்ளாகிய பெல் 212 ரக உலங்கு வானூர்தி அவரச அவசரமாக அநுராதபுர வான்படைத் தளத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிறீலங்காப் படையினர் கருத்துச் சொல்வதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளனர். சிறீலங்கா வான்படையினரிடம் பெல் 212 ரக உலங்கு வானூர்திகள் இரண்டே இருந்துள்ளன. அதில் ஒன்றே விடுதலைப் புலிகளின் ஆட்டிலறித் தாக்குதலுக்கு உள்ளாகி பயன்படுத்த முடியாத அளவுக்கு கடும் சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது.

1 comment:

ttpian said...

damaged aircraft is for scrap sale:
1 kg = Rs 10/-
pl.get in touch with Mahindha&co
(commission must)
after oneweek,lot of planes of srilankam army will be ready for scrap sales....interested old iron merchants,pl.get in touch with sarath fonseka ka ka ka