Thursday 31 July 2008

காரைதீவு வயற்பகுதியில் விவசாயி துப்பாக்கிச் சூட்டினால் படுகாயம்

காரைதீவு வயல் பகுதியில் விவசாயி ஒருவருக்கு துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் நேற்று நள்ளிரவு இடம்பெற்றுள்ளதாகச் சம்மாந்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.

கல்முனைக்குடியைச் சேர்ந்த முகம்மட் சித்தீக் (வயது 52) என்பவரே துப்பாக்கிச் சூட்டுக்கிலக்காகிப் படுகாயமடைந்துள்ளார்.

மேற்படி நபர் வயலுக்குச் சென்று கொண்டிருக்கையில் இனந்தெரியாத ஆயுததாரிகள் இத்துப்பாக்கிச் சூட்டை நடாத்தியதாக விசாரணைகளிலிருந்து தெரியவருகிறது.

அவர் ஓட்டிச் சென்ற மோட்டர் சைக்கிளும் துப்பாக்கிதாரிகளினால் அபகரிக்கப்பட்டுக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியவர் கல்முனை ஆதார வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பெற்று வருகிறார்.

No comments: