இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகம் தொண்டமான் உள்ளிட்ட மூன்று சிரேஸ்ட உறுப்பினர்களுக்கு நுவரெலியா நீதிமன்றம் விதித்த தண்டனை தொடர்பில் ஜனாதிபதி வழங்கிய பொதுமன்னிப்பை தாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என இ.தொ.கா தெரிவித்துள்ளது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சிரேஸ்ட உறுப்பினர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை தளர்த்துவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கொண்ட நடவடிக்கைக்கு நன்றி தெரிவிப்பதாக இ.தொ.க நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.
எனினும், குறித்த வழக்கு தொடர்பாக மேன்முறையீடு செய்து தாம் நிரபராதிகள் என்று நிரூபிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாகத் கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்றைய தினம் மாலை 4.30 அளவில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து இந்த விவகாரம் தொடர்பாக விளக்கமளித்துள்ளனர்.
எனினும் அரசியல் லாபங்களை கருத்திற் கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சட்டம் ஒழுங்கை புறந்தள்ளியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Wednesday 30 July 2008
அரசியல் லாபத்திற்காக சட்டத்தை மீறியுள்ளார் ஜனாதிபதி – குற்றச்சாட்டு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment