Monday 28 July 2008

புலிகளின் போர் நிறுத்தத்தின் நிஜப்பின்னணி என்ன??

ஒரு வலைப்பதிவிலிருந்து இதற்கு நாம் பொறுப்பல்ல

சரி சார்க் மாநாட்டுக்கு ஏன் புலிகள் போர் நிறுத்தம் அறிவிச்சிருக்காங்க?

நண்பன் : என்ன இருத்தாலும் தமிழீழமும் தெற்க்காசிய நாடுதானே?

நான் : அதெப்படி இந்தியா அனுமதிக்காம தமிழீழம் உருவாச்சு. இங்க நாங்கதான் வல்லரசு தெரியும்ல.

நண்பன்: ஆமாம். உங்கள் உளவுத்துறையும் உங்கள் ஊடகங்களும் அப்படி ஒரு பிம்பத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றன.

நான் : டேய். எங்க நாட்ட பத்தி தப்பா பேசாத. அப்பரம் விஜையகாந்த் அர்ஜுன் கிட்ட எல்லாம் சொல்லி உன்ன என்கவுண்டர் பண்ணிருவோம்.ஜாக்கிரதை!..

நண்பன்: நான் ஏண்டா உங்க நாட்டை பத்தி தப்பா பேசப் போறேன். இணையத்துல வந்து நாலு செய்திய படிச்சுப் பாரு. உனக்கே புரியும்.

நான் : என்னட சொல்றே?

நண்பன் : இப்ப உங்க பிரதமர் சார்க் மாநாட்டுக்கு சிறிலங்கா போறார்ல. அதுக்கு எதுக்கு 5000 வரையிலான உங்க ராணுவ வீரர்களோட போறார்?

நான் : அங்கதான் எப்ப பாத்தாலும் குண்டு வெடிக்குதல்ல. ஒரு வல்லரசின் பிரதமரை தீவிர வாதத்திடமிருந்து காப்பாத்தரதுல என்ன தப்பு?

நண்பன் : ஆமா. நேத்து கூடதான் உங்க நாட்ல பல இடங்கள்ல குண்டு வெடிச்சுது. அப்ப உங்க நாட்டுக்கு வர்ற அமெரிக்க அதிபர் 50000 படையினருடன் வருவாரா?

நான் : சரி என்னதான் சொல்ல வர்றே?

நண்பன் : முற்பகல் செய்யின் பிற்பகல் விழையும்னு உங்க அதிகாரிங்களுக்கு நல்லாவே தெரிஞ்சிருக்குப்பா.

நான் : புரியும் படி சொல்லு?

நண்பன் : கொஞ்ச நாளுக்கு முன்னாடி சிறிலங்காவின் பாகிஸ்தான் தூதரகத்துக்கு முன்னாடி குண்டு வெடித்து பாகிஸ்தான் தூதர் Bashir Wali Mohmand மயிர் இழையில் உயிர்தப்பினார்..

நான் : அது விடுதலைப் புலிகள் செஞ்சிருப்பாங்க.

நண்பன்: ஆனா இதை அவங்க செய்யல. இது முழுக்க முழுக்க இந்திய உளவுத்துறை பண்ணின சதி வேலை ன்னு ஒரு சில பத்திரிக்கைல படிச்சேன். இலங்கை விசயத்துல பாகிஸ்தானோட தலையீடு மற்றும் ஆயுத உதவி போன்றவை வல்லரசுக்கு சற்று அச்சத்தை கொடுத்ததாகவும் எங்கே தன் கட்டுப்பாட்டில் இருக்கும் இலங்கை என்ற சின்னப் பையன் வேறு ஒருவனின் கட்டுப்பாட்டுக்கு போயிருமோ என்ற எண்ணத்திலும் இன்னுமொரு காஷ்மீர் தென்னிந்தியாவில் உருவாகமல் தடுப்பதற்க்கு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும், இதில் புலிகளின் பெயரை பயண்படுத்திக்கொண்டாதாகவும் தகவல்.

நான் : சே... சே... எங்க நாடு இந்த மாதிரி வேலையெல்லாம் செய்யாது. இது முழுக்க முழுக்க வெளி நாட்டு சதி.

நண்பன் : கொஞ்ச நாளுக்கு முன்னாடி ஆப்கானிஸ்தான்ல இந்திய தூதரகத்துல குண்டு வெடிச்சு 40 க்கும் மேற்பட்டோற் இறந்த்ததாவது தெரியுமா?

நான் : ஆமாம். அது எங்களின் எதிரி பாகிஸ்தானின் சதிதான்.

நண்பன் : அதற்க்கு காரணம் தாலிபான்கள் என்று பாகிஸ்தான் சொல்லியிருக்கே?

நான் : அது பொய். பாகிஸ்தானின் ISI சதி.

நண்பன் : அது பாகிஸ்தானின் சதி. இங்கு நடந்தது புலிகளின் சதி.... நல்ல பகுத்தறிவுடா உனக்கு.

நான் : சரி இதுக்கும் புலிகளின் போர் நிறுத்தத்துக்கும் என்னடா சம்பந்த்தம்?

நண்பன் : இருக்கு. இந்த மாநாட்டை சாக்காக வைத்து பாகிஸ்தான் இந்திய பிரதமரை கொல்ல சதி திட்டம் தீட்டிருக்கலாம்னு ஒரு செய்தி இந்திய உளவுப்பிரிவுக்கு புலிகளின் உளவுப் பிரிவு மூலமா அனுப்பப் பட்டிருக்கு.

நான் : சரி நம்பிட்டேன். இதையே சாக்காக வைத்து பாகிஸ்த்தான் பிரதமரை கொலை செய்ய இந்தியா சதி செய்திருக்கிறதுன்னு தாலிபான் உளவுப்பிரிவு பாகிஸ்தான் உளவுப்பிரிகுக்கு தகவல் அனுப்பிச்சிருக்குமே?

நண்பன் : இருந்தாலும் இருக்கும். அதனால தான், அவுங்க இந்தியப் படைகள் பாதுகாப்புக்காக இலங்கையில் இருந்தால், தாங்கள் கலந்து கொள்ள போவதில்லைன்னு அறிவிச்சிருக்காங்க. இந்த வம்புல ஏன் தேவையில்லாம தமிழரின் விடுதலைப் போராட்டம் மாட்டிக்கிட்டு அல்லல் படனும்னு புலிகள் போர் நிறுத்தம் அறிவிச்சிட்டாங்க.

நான் : காக்கா உக்காற பனை மரம் விழுந்த கதையாவல்ல இருக்கு.

நண்பன் : "உண்மை எதுன்னு யாருக்கு தெரியும். காலம் தான் பதில் சொல்லனும்" னு சொல்லிட்டு இணைப்பை துண்டித்து விட்டான்.

என்னடா இன்னைக்கு ஒரே திகிலா போகுதுன்னு வொரி.. மண்ணிக்கணும்..வருத்தப்பட்டுட்டே .. வருத்தத்த போக்க ஏதவது ஒரு பள்ளிக்கூடம் பக்கம் பொறேன்.

http://puliamarathinnai.blogspot.com/2008/07/2008.html

No comments: