Monday 28 July 2008

கையடக்கத் தொலைபேசி பாவனையாளர்கள் புற்றுநோயால் தாக்கப்படும் அபாயம்- பிற்ஸ்வேம் நிறுவனம்

கையடக்க தொலைபேசிப் பாவனையளாகர்ளை புற்றுநோய் தாக்கும் அபாயம் இருப்பதாக எச்சரித்திருக்கும் பிற்ஸ்வேக் புற்றுநோய் நிலையப் பணிப்பாளர் டாக்டர். றோனால்ட் ஹேர்வெர்மன், தம்மைத் தாமே பாதுகாப்பதற்கு அவர்கள் முன்வரவேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

உள்வாரியாக தொழில்புரியும் பணியாளர்களுக்கு டாக்டர் பிற்ஸ்வேக், அனுப்பி வைத்துள்ள சுற்றுநிருபத்தில் மூளை புற்றுநோய் சம்பந்தமாக வெளியிடப்படாத அறிக்கைகள் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

சரியான தகவல்கள் வரும் வரையும் தாங்கள் தாமதிக்கவில்லையெனக் குறிப்பிட்ட றோனால்ட் ஹேர்வெர்மன், ஆனாலும் தவறிழைத்துவிட்;டு வருந்துவதை விட புற்றுநோய் வராமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது சிறந்ததெனக் கூறினார். அத்துடன், கையடக்க தொலைபேசிப் பாவனையின் பாதுகாப்புத் தொடர்பில் வெளியிடுவதற்கு போதுமான தகவல்கள் இருப்பதாக அவர் கூறினார்.

இதேவேளை கையடக்கத் தொலைபேசிப் பாவனையால் மூளையின் தொழிற்பாட்டுக்கு பாதிப்புக்கள் ஏற்படுமென எந்தவொரு ஆய்விலும் கண்டுபிடிக்கப்படாத போதிலும், இவ்வாறு இருந்தாலும் அது சிறியளவிலேயே இருக்குமென அமெரிக்க உணவு மற்றும் மருத்துவ நிலையம் கூறியுள்ளது. எவ்வாறாயினும் நீண்டகால கையடக்கத் தொலைபேசிப் பாவனையால் புற்றுநோய் உட்பட உடற் பாதிப்புக்கள் ஏற்படலாமென டாக்டர் ஹேர்வெர்மன் குறிப்பிட்டுள்ளார்.

10 வருடங்களிலிருந்து கையடக்க தொலைபேசி பாவிக்கப்பட்டாலும் கூட, உடல் நோய்கள் வருவதற்கு காரணமாக அமைவதில்லையென கடந்த செப்டம்பர் மாதத்தில் லண்டன் ஆர்வலர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

எனினும் நீண்டகாலப் பாவனையாளர்கள் மத்தியில் மூளையில் புதிதாக கட்டி உருவாகுவதாக கையடக்க தொலைபேசி நிலையம் மற்றும் சுகதார ஆய்வுத் திட்டம் மேற்கொண்ட ஆய்வின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கையடக்கத் தொலைபேசிப் பாவனையால் மூளை சம்பந்தமான புற்றுநோய் வருவதற்கான சாத்தியங்கள் எதுவுமில்லையென 6 வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

No comments: