Tuesday 29 July 2008

நுவரெலியாவில் இருவர் கைது--காவற்துறைப் பேச்சாளர்

நுவரெலியா மாவட்டத்தின் சீதா-எலிய பிரதேசத்தில் வீடொன்றில் இருந்து வெடி மருந்துகளும், குண்டு தயாரிப்பு பயன்படுத்தும் ஏனைய சில பொருட்களுடன் இரண்டு பேர் நேற்றிரவு கைதுசெய்யப்படடதாக காவற்துறையின் ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.

நுவரெலிய காவல்துறையினர் நேற்றிரவு மேற்கொண்ட தேடுதலின் போது குறித்த வீட்டில் இருந்து 200 கிராம் ரி;என்ரி ரக வெடிமருந்து, 281 இரும்பு உருளைகள், 04 மின் டெட்டநேட்டர்கள் மற்றும் இரண்டு மின்கலங்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

இதன் போது வீட்டில் இருந்த இரண்டு பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாகவும் நுவரெலிய காவல்துறையினர் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் ரஞ்சித் குணசேகர குறிப்பிட்டார்.

No comments: