Tuesday 1 April 2008

இளவரசர் தீபேந்திரா தனது குடும்பத்தினர் அனைவரையும் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தார்.

ஆறு ஆண்டுகளுக்கு முன், நேபாளத்தில் மன்னர் குடும்பமே துப்பாக்கி சூடுக்கு பலியான விவகாரத்தில் பேசப்பட்ட இளவரசி தேவயானி ராணா மீண்டும், புது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். நேபாளத்தில், 2001ம் ஆண்டு, இளவரசர் தீபேந்திரா தனது குடும்பத்தினர் அனைவரையும் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தார். தானும், தற்கொலை செய்து கொண்டார். இளவரசி தேவயானி ராணாவை, தீபேந்திரா விரும்பினார். அவரை திருமணம் செய்து கொள்ள, குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் தான், இந்த விபரீத சம்பவம் நிகழ்ந்தது என பேசப்பட் டது.இதன்பிறகு, இந்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் அர்ஜுன் சிங்கின் பேரன் ஐஸ்வர்யா சிங்கை, தேவயானி ராணா திருமணம் செய்து கொண்டார். இதன் பிறகே, அவரால் ஏற்பட்ட பரபரப்பு ஓய்ந்தது.நேபாளத்தில் விரைவில், அரசியல் நிர்ணயசபை தேர்தல் நடக்க உள்ளது. தேவயானியின் தந்தை, பசுபதி சுமேஷர் ஜங் பகதுõர் ராணா, இந்த தேர்தலில், இரண்டு தேர்தலில் போட்டியிடுகிறார். அவரது தலைமையிலான ராஷ்டிரிய பிரஜாதந்திரா கட்சி, நேபாளத்தில், முக்கிய எதிர்க்கட்சியாக உள்ளது. தந்தை சார்பாகவும், அவரது கட்சி சார்பாகவும், பிரசாரம் செய்ய, இளவரசி தேவயானி, நேபாளம் வந்துள்ளார். இதனால், ஆறு ஆண்டுகளுக்கு பிறகு, மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

No comments: