Friday 30 May 2008

மட்டகளப்பு ஏறாவூர் வன்முறைகளின் காரணமாக 300 குடும்பங்கள் இடம்பெயர்வு

மட்டகளப்பு ஏறாவூர் வன்முறைகளின் காரணமாக 300க்கும் அதிகமான குடும்பங்கள் இடம்பெயர்ந்து தன்னாமுனையிலுள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் தஞ்சமடைந்துள்ளதாக பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றன .

ஏறாவூர் பிரதேசத்தில் ஏற்பட்ட வன்முறைகளின் காரணமாக அச்சமடைந்த தமிழ், முஸ்லிம் மக்களே இவ்வாறு இடம்பெயர்ந்துள்ளனர் இடம்பெயர்ந்தவர்கள் நேற்றையதினம் மாலை தமது சொந்த இடங்களுக்கு திரும்புமாறு பணிக்கப்பட்டுள்ளனர்.

தளவாய், ஐயங்கேணி, ஆறுமுகத்தான் குடியிருப்பு புன்னைக்குடா ஆகிய இடங்களைச் சேர்ந்த மக்களே இடம் பெயர்ந்துள்ளனர். ஏறாவூரில் திங்களன்று மாலை இடம்பெற்ற வன்முறைகளின் போது 23 இளைஞர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினம் ஏறாவூரில் நிலைமை வழமைக்கு திரும்பியதுடன் முஸ்லிம் முக்கியஸ்தர்களும் தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பினரும் சந்தித்து நேற்றுமாலை பேச்சுவார்த்தை நடத்தினர் என்று தெரிவிக்கப்படுகிறது.

No comments: