Saturday 31 May 2008

பேச்சுவார்த்தைக்கு மத்தியில் ஆயுதக்களைவும் வேண்டும்

போர் நிறுத்தம் என்பது ஆயுதகளைவுடன் தொடர்புபடுத்தப்பட வேண்டும். அரசியல் பேச்சுவார்த்தைகள் நடைபெறும் போது முறையான மேற்பார்வையின் கீழ் ஆயுதகளைவுக்கான நடவடிக்கைகளும் இடம்பெறவேண்டும். ஆனால் இலங்கையில் அந்நிலை இல்லை என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கொஹென கூறியுள்ளார்.

சிங்கப்பூரில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற ஆசிய பசுபிக் பாதுகாப்பு மாநாட்டில் கருத்து தெரிவிக்கும் போதே வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கொஹென இவ் வாறு தெரிவித்துள்ளார்.

நாம் இப்பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலமான தீர்வைக் காண விரும்புகிறோம். ஆனால் இதுவரை அவர்கள் (புலிகள்) ஆக்கபூர்வமான பேச்சுவார்தைக்கான விருப்பத்தை வெளிப்படுத்தவில்லை எனவும் அவர் கூறினார்.

சிங்கப்பூர் நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத் தில் இடம்பெற்ற இந்த மாநாட்டில் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித ஹோகண மேலும் தெரிவித்துள்ளதாவது: பாலித ஹோகன்ன மேலும் தெ?வித்துள்ளதா வது: இலங்கை அரசாங்கம் இன்று விடு தலைப் புலிகளின் பயங்கரவாத யுத்தத் திற்கு முகம் கொடுத்து பல சவால்களை எதிர்கொண்டுள் ளது. கடந்த 30 வருடங்களாக இலங்கை மக்கள் இந்த யுத்ததிற்கென அளவுகடந்த விலைகளைக் கொடுத்துள்ளனர். பொதுமக்களை இலக்கு வைக்கும் தற்கொலைத் தாக்குதல்கள் அண் மைக்கலமாக அதிகரித்துள்ளன. இந்த தாக்குதல்களில் இருந்து மக்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளையே இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.

பயங்கரவாத தாக்குதல்கள் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்துறை சவால்க ளைச் சந்தித்துள்ளது.

கிழக்கு மாகாணத்தில் நடத்தப்பட்ட தேர்த லில் மக்கள் தமது தலைவரைதேர்ந்தெடுத் துள்ளனர். வெளிநாட்டு முதலீட்டாளர் களையும் சர்வதேச தொண்டுநிறுவனங்களை யும் கிழக்கின் அபிவிருத்தியில் பங்கெடுக் குமாறு அழைக்கிறோம்.

இலங்கை அரசாங்கம் இராணுவத் தீர்வில் நாட்டங்கொண்டுள்ளதாக செய்யப்படும் பிர சாரத்தில் எதுவித உண்மையுமில்லை. இனப் பிரச்சினைக்கு தீர்வைக் காண்பதற்காக அரசாங்கம் அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழுவை உருவாக்கி தீர்வுத்திட்டத்தை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்த தீர்வுத் திட்டத்திற்கு தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகள் தமது பெரும்பான்மையான ஆதரவைத் தெரிவித்துள்ளன. ஆனால் புலிகள் தொடர்ந்தும் பயங்கரவாத தாக்குதல்களை நடத்துகின்றனர்.

இலங்கை அரசாங்கம் பேச்சுவார்த்தை மூலம் இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணும் வழிமுறைகளை எதிர்பார்த்திருக்கிறோம்.

ஆனால் புலிகள் இதுவரை அதற்கான சமிக் ஞைகளை வெளிப்படுத்தவில்லை. புலிகள் பேச்சு மேசைக்கு வரலாம். ஆனால் பேச்சு மேசையில் நேர்மையாக செயற்பட வேண்டும்.

அத்துடன் நிரந்தர சமாதானத்தை நோக்கியதாக அந்த பேச்சுவார்த்தை இருக்க வேண்டும் என் பதுடன் அவர்கள் ஆயுதங்களை ஒருபக்கமாக வைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகமவும் சிங்கப்பூருக்கு நேற்றையதினம் விஜயம் மேற்கொண்டிருந்தார்.

No comments: