Friday 30 May 2008

மொனராலையில் காவல்துறையினர் மீது இனந்தெரியாத கோஷ்டி தாக்குதல்


மொனராகலையில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் மீது இனந்தெரியாத துப்பாக்கிதாரிகள் திடீர் தாக்குதல் மேற்கொண்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார

மொணராகலை கரகொலகஸ்பிட்டிய என்னும் இடமத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றதாகத் தெரியவருகிறது. இந்த சம்பவத்தில் ஒரு காவல்தறை உத்தியோகத்தர் காயமடைந்துள்ளார். கறுப்பு நிற ஆடையணிந்த 20 பேரைக் கொண்ட குழுவினர் தன்னியக்க துப்பாக்கிகளின் மூலம் இந்தத் தாக்குதலை மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸார் மேற்கொண்ட பதில் தாக்குதல்களைத் தொடர்ந்து அவர்கள் தப்பியோடியதாக மேலும் குறிப்பிடப்படுகிறது

No comments: