Saturday 31 May 2008

கிழக்கு மாகாண அபிவிருத்திக்கு இந்தியா உதவும்????

indian-highcommissioner-alok-prasad.jpgகிழக்கு மாகாண அபிவிருத்திக்கு தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியா வழங்கும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் ஆலோக் பிரசாத் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாண சபையின் சுகாதார அமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாவை அழைத்து கலந்துரையாடிய போதே உயர்ஸ்தானிகர் இதனை குறிப்பிட்டுள்ளார். கிழக்கு மாகாணத்தில் தற்போது ஏற்பட்டுள்ள பதற்ற நிலை மற்றும் மாகாண பேரவையின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இந்த சந்திப்பில் பேசப்பட்டுள்ளன. இந்த சந்திப்பின் போது கிழக்கு மாகாணத்தில் தமிழ் முஸ்லீம் மோதல்கள் ஏற்படாதிருக்க வேண்டிய தேவை குறித்து உயர்ஸ்தானிகர் வலியுறுத்தியதாக அமைச்சர் ஹிஸ்புல்லா குறிப்பிட்டுள்ளார்.

No comments: