Friday 30 May 2008

வவுனியா மன்னார் வீதியில் புலிகள் தாக்குதல்

வவுனியா மன்னார் வீதியில் 9 வது காவல்துறை வலயப் பகுதியில் உள்ள இரண்டு பதுங்குகுழிகள் மீது இன்று அதிகாலை விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்தியதாக வவுனியா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தாக்குதல்களில் எந்த சேதமும் ஏற்படவில்லை என தெரிவித்துள்ள காவல்துறையினர், ஏனைய காவலரண்களில் உள்ள காவல்துறையினரின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட பதில் தாக்குதலில் விடுதலைப்புலிகள் பின்வாங்கி சென்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா, மன்னார் வீதியில் விடுதலைப்புலிகளின் தாக்குதல்கள் அண்மை காலமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments: