எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் உள்ள தொழிற்சாலையில் பணிபுரியும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் செய்து வருவதால் சட்டப்படி அவர்கள் மீது நடவடிக்கை எடு;க்கப் போவதாக எகிப்து அரசு அறிவித்துள்ளது.
கைரோ நகரிலுள்ள தனியார் நிறுவனமொன்றில் பணிபுரிந்து வந்த நூற்றுக்கணக்கான இலங்கையர்கள் தமக்கு முறையான சம்பளம் வழங்கப்படவில்லை எனக்கூறி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
எகிப்து நாட்டின் சட்டதிட்டங்களுக்கமைய ஆர்பாட்டங்களில் ஈடுபடல் போராட்டங்களை நடத்துதல் போன்றவை தடை செய்யப்பட்டுள்ள நிலையில் இலங்கையர்கள் அவ்வாறான ஒரு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவிக்கப் பட்டுள்ளது இதனால் எந்நேரமும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இலங்கையர்கள் யாவரும் கைது செய்யப்படலாம் என தெரிவிக்கப் பட்டுள்ளது.
Saturday 31 May 2008
எகிப்தில் இலங்கையர்கள் ஆர்ப்பாட்டம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment