Saturday 31 May 2008

திருகோணமலையில் ஊர்காவல் படை வீரர் சுட்டுக்கொலை

திருகோணமலை மாவட்டம் சேருநுவரவில் இருந்து நீலபொல பிரதேசத்தை நோக்கி மோட்டார் சைக்களில் சென்று கொண்டிருந்த ஊர்காவல் படையைச் சேர்ந்த ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

காங்குவேலி என்ற பிரதேசத்தில் இந்த சம்பவம் இன்று இடம்பெற்றதாக சேருநுவர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இவருடன் சென்ற படைச்சிப்பாய் ஒருவர் உயிர்தப்பியுள்ளார். இந்த துப்பாக்கி பிரயோகத்தை விடுதலைப்புலிகள் மேற்கொண்டிருக்கலாம் என காவல்துறையினர் கூறியுள்ளனர்.

No comments: