Saturday 31 May 2008

இலங்கையில் 40 வீதமான எரிபொருளை மகிந்த அரசாங்கமே பயன்படுத்துகிறது

இலங்கையில் பயன்படுத்தப்படும் எரிபொருளின் பெரும்பகுதியை அரசாங்கமே பயன்படுவத்துவதாக செய்திகள் வெளியிட்டுள்ளன.

நாட்டில் பாவனையில் உள்ள 11 லட்ச நான்கு சக்கர வாகனங்களில் 2.5 லட்சம் வாகனங்கள் அரசாங்கத்திற்குச் சொந்தமானதென தெரிவிக்கப்படுகிறது.

நிதியமைச்சின் பொருளாதார அபிவிருத்தி தொடர்பான தேசிய சபையின் நிறைவேற்று பணிப்பாளர் கலாநிதி டி.எஸ்.ஜயவீரவினால் இந்த புள்ளிவிபரத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

வாகன நெரிசல் காரணமாக இழக்கப்படும் எரிபொருள் மற்றும் மனித உழைப்பின் பெறுமதி வருடாந்தம் சுமார் 300,000 மில்லியன் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

No comments: