Friday 30 May 2008

இலங்கைக்கான உதவி நிறுத்தப்பட்டால் வறுமை ஏற்படும்-பீரிஸ்

மனித உரிமைகள் நிலையை காரணம் காட்டி இலங்கையின் மீது பொருளாதார தடைகளை மேற்கத்தைய நாடுகள் விதித்தால் அது இலங்கையின் இனப்பிரச்சினையின் தாக்கத்தை அதிகரிக்கவே செய்யும் செய்யும் என இலங்கை அரசாங்கம் எச்சரித்துள்ளது.

அமரிக்காவும் ஐரொப்பிய ஒன்றியமும் இலங்கைக்கான பல உதவி திட்டங்களை மனித உரிமை மீறல்களை காரணம் காட்டி நிறுத்தியுள்ளன. இந்தநிலையில் பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்ட மூன்றாம் உலக நாடுகளின் பிரச்சினைகளை விளங்கிக்கொள்வதில் அனுதாபம் காட்டப்படவேண்டும் என இலங்கையில் சர்வதேச வர்த்தக்கத்துறை அமைச்சர் ஜி எல் பீரிஸ் அமரிக்க வாசிங்டனில் வைத்து ஏ எப் பி செய்தி சேவைக்கு தெரிவித்துள்ளார்.

ஆடை ஏற்றுமதி தொடர்பான கோட்டா முறையை ஐரோப்பிய நாடுகள் விலக்கிக்கொண்டால் இலங்கையில் ஆயிரக்கணக்கான மக்கள் பாரிய வறுமை நிலைக்கு உள்ளாவர் என்றும் அவர் அச்சம் வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் தொடரும் என அறிவித்துள்ள நிலையிலேயே ஜி எல் பீரிஸின் இந்த கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

1 comment:

ttpian said...

so waht?
Mahindha will beg from India
Godhapaya will beg from China
Perish can beg from EU countries!