Saturday 31 May 2008

களனியில் எனக்கு உதவி செய்யும் மதுபானக் கடைகளைத் தவிர்ந்த ஏனையவற்றை மூடிவிடுவேன் - மேர்வின் சில்வா

களனி பிரதேசத்தில் தமக்கு ஒத்துழைப்பு நல்கும் ஒரு சில மதுபானக் கடைகளைத் தவிர்ந்த ஏனையவற்றை மூடப் போவதாக அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

களனிசிறி என்ற புதிய பாலம் திறப்பு விழா வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

களனி விஹாரையின் மாநாயக்க தேரர் கொள்ளுப்பிட்டி சங்கரக்கித்த தேரர் பெருந்தெருக்கள் அமைச்சர் ரீ.பி. ஏக்கநாயக்க களனி விஹாரையின் பஸ்நாயக்க நிலமேல தம்மிக்க அடிகல விமான சேவைகள் பணிப்பாளர் நாளக பமுனுசிங்க தொலைதொடர்பு ஆணைக்குழுவின் தலைவர் பிரியன்த காரியப்பெரும ஆகியோர் உள்ளிட்ட பல முக்கியஸ்தாகள் கலந்து கொண்டனர்.


மேலும் களனி பிரதேசத்தில் உள்ள அனைத்து மாட்டிறைச்சி கடைகளை மூடுவதற்கும் மாதமொன்றுக்கு 4 மாடுகளை விடுதலை செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப் போவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments: