Saturday 31 May 2008

மஹிந்த ராஜபக்ஷவிற்கு நோபல் சமாதானப் பரிசு வழங்கப்பட வேண்டும். - தென்மாகாண முதலமைச்சர்

தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து கிழக்கு மாகாணத்தை மீட்டு அங்கு ஜனநாயகத்தை நிலைநாட்டிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு நோபல் சமாதானப் பரிசு வழங்கப்பட வேண்டும். 24 ஆவது முதலமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பௌதீக ஒருமைப்பாட்டைக் கட்டிக்காப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்ட கிழக்கு வாழ் மக்கள் அனைவருக்கும் நன்றி பாராட்டுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரிவினைவாதத்தை இனங்கண்டு அதற்கு எதிராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ செயற்பட்டுவதாகத் தென்மாகாண முதலமைச்சர் குறிப்பிட்டார்.

1 comment:

ttpian said...

comedy of the year!