Thursday 29 May 2008

எலிசபத் பாக்கியதேவி மஅன் சதேக் கவுன்சிலின் மேயராக தெரிவு செய்யப்பட்டு உள்ளார்.

எலிசபத் பாக்கியதேவி மஅன் சதேக் கவுன்சிலின் மேயராக தெரிவு செய்யப்பட்டு உள்ளார். இவர் லிபிரல் டெமொகிரட் கட்சியில் கவுன்சிலராக தெரிவு செய்யப்பட்டு இருந்தார். இவர் இரண்டு தடவைகள் உள்ளுராட்சித் தேர்தலில் வெற்றிபெற்று கவுன்சிலராக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரித்தானியாவில் கவுன்சிலராக தெரிவு செய்யப்பட்ட முதல் தமிழ் பெண் இவரே. இவரைத் தொடர்ந்து இப்போது சசிகலா என்பவரும் கவுன்சிலராகி உள்ளார். தமிழ் மக்கள் பெரும்பாலும் இல்லாத உள்ளுராட்சிப் பிரிவில் வெற்றிபெற்ற இவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் மிகுந்த அனுதாபி.

உதவி மேயராக இருந்து மேயராகி உள்ள இவர் தமிழர்கள் புலம்பெயர்ந்த ஆரம்ப நாட்களில் பிரித்தானியாவில் தமிழ் பொது ஸ்தாபனங்களின் உருவாக்த்தில் முக்கிய பங்கெடுத்தவர். சுனாமி நிவாரணத்திலும் இவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.

No comments: