Saturday 31 May 2008

அரச படைகளுக்கு எதிரான ஊடக நம்பிக்கைத் துரோகத்தை நிறுத்தும்படி - தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் அறிக்கை

இலங்கை திருநாட்டின் அரச படைகளுக்கு எதிராக செய்திகளை வெளியிடும் ஊடக நம்பிக்கைத் துரோகத்தை நிறுத்தும் படி,புலி முத்திரை பொறித்து தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில் நாங்கள் இந்த நாட்டின் பிரஜைகள்.கடந்த 28 ஆண்டுகளாக நாட்டை மீட்டெடுப்பதற்காக பயங்கரவாதிகளுடன் போரிட்டு வருகிறோம்.

நாட்டில் தாண்டவமாடிக்கொண்டிருக்கும் பயங்கரவாதத்தில் சுமார் 70 000 க்கு மேற்பட்ட மக்கள் தங்களது வாழ்க்கையை இழந்துள்ளனர்.என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை இவ்வாறு வெளியிடப்பட்டுள்ள செய்தி,உண்மைகளையும் ஜனநாயகக் கருத்துகளையும் மக்கள் மத்தியில் விதைக்கும் ஊடகங்களை அச்சுறுத்தும் பாணியில் அமைந்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது

No comments: