பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ, ஊடகவியலாளர்களான போத்தல ஜெயந்த மற்றும் சனத் பாலசூரிய ஆகியோரை, அழைத்து எச்சரித்து, அச்சுறுத்த மேற்கொண்ட முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய அரச ஊடக ஊழியர் சம்மேளணம் கொழும்பு கோட்டையில் இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸவுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பபட்டன. இந்த ஆர்ப்பாட்ட நிகழ்வில் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களாகன ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, ருக்மன் சேனாநாயக்க, தலதா அத்துகோரள, ஐக்கிய ஊழியர் சங்கத்தின் ஊடக பேச்சாளர் லால் பெரேரா, உட்பட பலர் கலந்துகொண்டனர்.
Friday 30 May 2008
கோத்தபாய ராஜபக்ஸவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment