மன்னார் வவுனியா வீதியில் உள்ள செல்வநகர் பகுதியில் டெலோ அமைப்பின் தலைவர்களில் ஒருவரான பாஸ்கரன் என்பவரின் மனைவி இனந்தெரியாதோரால் நேற்று சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக வவுனியா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஜொஷப்பின் என்ற இந்த பெண் அவரது வீட்டுக்கு முன்னால் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் சடலத்தை மீட்டுள்ளதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை பெண்ணின் கணவரான டெலோ அமைப்பை சேர்ந்த பாஸ்கரன் இரண்டு மாதங்களுக்கு முன்னர் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். இந்த கொலைகளை விடுதலைப்புலிகளின் பிஸ்டல் குழுவினரே மேற்கொண்டதாக காவல்துறையினர் குற்றம்சுமத்தியுள்ளனர்.
Thursday 29 May 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment