Friday 30 May 2008

ஐக்கிய தேசிய கட்சி சமஸ்டி தீர்வு யோசனையை இன்னும் கைவிடவில்லை

unplogo8.jpgஐக்கிய தேசிய கட்சி சமஸ்டி தீர்வு யோசனையை இன்னும் கைவிடவில்லை என தெரிவித்துள்ளது. இனப்பிரச்சினை தொடர்பிலான யுத்ததிற்கு, சமஸ்டி மூலம் தீர்வுகாண வேண்டும் என்ற ஐக்கிய தேசிய கட்சியின் நிலைப்பாட்டில் எதுவித மாற்றமும் ஏற்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனை கூறினார். ஐக்கிய தேசிய கட்சி சமஸ்டி தீர்வு குறித்த யோசனையை கைவிடவில்லை.

ஊடக ஒடுக்குமுறை மற்றும் பொருட்களின் விலை அதிகரிப்புக்கும் யுத்தமும் ஒரு காரணம் எனவும் அவர் குறிப்பிட்டார். ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சி காலத்தில் இடம்பெற்ற , ஊடக ஒடுக்குமுறைகள், ஐக்கிய தேசிய கட்சியின் புதிய ஆட்சியில் இருக்காதவாறு பார்த்து கொள்ள வேண்டிய தேவை தமக்கு இருப்பதாகவும் அவர் கூறினார்.

ஊடக ஒடுக்குமுறைக்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் விருந்துபசாரததில் இருந்து வெளியேறி ஊடகவியலாளர் ஒருவர் குறித்தும் அவர் நினைவுகூர்த்தார்.

ஊடகவியலாளர்களுக்கு தமது சுதந்திரம் மற்றும் ஆத்ம கௌரவம் குறித்த உணர்வு இருக்க வேண்டும் எனவும் அவ்வாறான உணர்வுகள் ஊடகவியலாளர்கள் மத்தியில் இருக்குமானால், கீத் நொயார், மற்றும் போத்தல ஜெயந்த, சனத் பாலசூரிய ஆகியோருக்கு ஏற்பட்ட சம்பவங்களின் பின்னர், ஊடகவியலாளர்கள் ஜனாதிபதி வழங்கும் விருந்துபசாரங்களில் கலந்துகொள்ள மாட்டார்கள் எனவும் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டார்

No comments: