Thursday 29 May 2008

காயமுற்ற யாழ் தமிழர் கைதாகி விசாரணையில்!

தெஹிவளை ரயில் குண்டுவெடிப்பில் காயமடைந்து களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த யாழ்பாணத் தமிழர் ஒருவர் பொலிஸாரினால் நேற்றுக்காலை கைது செய்யப்பட்டார். மொறட்டுவ சொய்சாப்புரப் பகுதியில் வசித்து வந்த 57 வயதுடைய நபர் குண்டுவெடிப்புடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார் என தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட தமிழர் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டு விஷேட பொலிஸ்குழுவினால் விசாரணைக்குட்படுத்தபட்டு வருகின்றார் என தெரிவிக்கப்படுகிறது

No comments: