Thursday 29 May 2008

காதலியையும் அவரது தாயையும் கொன்ற பொலிஸ் கான்ஸ்டபிள் நஞ்சருந்தி தற்கொலை - ஊவா பரனகமவில் விபரீதம்

காதலால் தோல்வியடைந்தார் எனக்கூறப்படும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தனது காதலியையும் காதலியின் தாயாரையும் கொன்று விட்டு தானும் நங்சருந்தி தற்கொலை செய்துள்ளார் ஊவா பரனகம மெதவல என்ற இடத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படும்

இச்சம்பவத்தில் மெதவலையைச்சேர்ந்த 52 வயதான டி.எம் பண்டாரமெனிக்கா என்பவரும் அவரது மகளான 26வயதுடைய டி.எம்.தினேசா குணதிலக்க என்பவருமே மேற்படி சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

இவர்களை கொலை செய்து விட்டு கிருமி நாசினி அருந்தி தற்கொலை செய்து கொண்டவர் எனக்கூறப்படும் வாகரை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வரும் இலக்கம் 70359 என்ற இலக்கமுடைய தென்னகோன் என்றவர் என தெரிவிக்கப்படுகிறது இவர் விடுமுறையில் வீடு வந்திருந்த போது மேற்படி சம்பவம் இடம்பெற்றது

என கூறப்படுகிறது சம்பவம் தொடர்பாக கிராமவாசிகள் சிலர் ஊவா பரனகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரியங்க குமாரவிற்கு வழங்கிய தகவலையடுத்து அங்கு சென்ற பொலிஸார் மூன்று சடலங்களையும் மீட்டுள்ளனர்

இதுதொடர்பான விசாரணைகளின் போது தற்கொலை செய்து கொண்ட கான்ஸ்டபிளின் காதலுக்கு முட்டுக்கட்டை ஏற்பட்டதாலேயே அவர் ஆத்திரமடைந்து அவரது தாயையும் காதலியையும் கோரமாக கொலை செய்ததுடன் தானும் கிருமிநாசினி அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பது தெரிய வந்தது மேதிக விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

No comments: