Friday 30 May 2008

ஜே.வி.பி.யின் செயற்பாடுகளை நோர்வே, சுவீடன் டென்மாக் நாடுகளில் அதிகரிக்க திட்டம். - தமிழருக்கு எதிரான அமுக்க வேலைகள் அதிகரிக்கும்.

ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க நோர்வே சுவீடன் டென்மாக் நாடுகளுக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டு நேற்று வியாழக்கிழமை பயணமானார்.

ஜே.வி.பி.யின் பிரச்சாரச் செயலாளராகவும் நாடாளுமன்றக்குழுவின் தலைவராகவும் இருந்த விமல் வீரவன்சவின் வெளியேற்றத்தின் பின்னர் உருவாகியிருக்கும் நிலைமைகள் தொடர்பாக கட்சியின் சர்வதேசக் கிளைகளுக்கு விளக்குவதும் அவற்றை மீள ஒழுங்கமைப்பதும்தான் அவருடைய விஜயத்தின் முக்கிய நோக்கமாக இருக்கும் என கட்சிவட்டாரங்கள் தெரிவித்தன.

சுவீடன் டென்மார்க் நோர்வே ஜேர்மனி மற்றும் பிரத்தானியா ஆகிய நாடுகளுக்குச் செல்லும் சோமவன்ச அமரசிங்க அந்த நாடுகளிலுள்ள ஜே.வி.பி.யின் கிளைகளை புனரமைப்புச் செய்யும் நடவடிக்கைகளுக்கு உதவுவார். (தமிழருக்கு எதிரான அமுக்க வேலைகளில்) கட்சிப் புனரமைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு மேலதிகமாக இந்நாடுகளில் உள்ள சிங்கள அமைப்புக்களின் கூட்டங்களில் பங்குகொண்டு உரையாற்றுவதுடன் புலம்பெயர்ந்த மக்களையும் சந்தித்து உள்நாட்டு நிலைமைகள் தொடர்பாகப் பேச்சுக்களை நடத்துவார்.


சுவீடனிலுள்ள முதலீட்டாளர்களின் கருத்தரங்கு ஒன்றிலும் சோமவன்ச உரையாற்றவிருக்கின்றார். சிறிலங்காவில் முதலீடு செய்வதற்கு சுவீடன் முதலீட்டாளர்களுக்கு உள்ள வாய்ப்புக்கள் தொடர்பாக இங்கு உரையாற்றும் அவர் இவ்விடயம் தொடர்பில் முதலீட்டாளர்களுடன் தனிப்பட்ட ரீதியான பேச்சுக்களை நடத்துவதற்கும் திட்டமிட்டுள்ளார்.


சுவீடனில் தனது வெளிநாட்டு விஜயத்தை ஆரம்பிக்கும் அவர் அதனைத் தொடர்ந்து டென்மார்க் செல்லவுள்ளார்.

விமல் வீரவன்ச தலைமையிலான குழுவினர் ஜே.வி.பி.யிலிருந்து வெளியேறி புதிய கட்சி ஒன்றை அமைத்திருப்பதையடுத்து கட்சியின் சர்வதேசக் கிளைகள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டிருக்கின்றது.

இந்தக் குழப்பநிலையை முடிவுக்குக்கொண்டுவந்து கட்சிக் கிளைகளின் செயற்பாடுகளை வழமைக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டு கட்சியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா ஏற்கனவே ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றிருந்த போதிலும் அதில் பெருமளவு வெற்றி கிடைக்காததையடுத்தே இப்போது கட்சித் தலைவர் ஐரோப்பா பயணமாகியிருக்கின்றார்.

ஜே.வி.பி.யைப் பொறுத்தவரையில் அதன் வெளிநாட்டுக்கிளைகளின் மூலமாகவே பெருந்தொகையான பணம் கிடைக்கின்றது. இதில் குறிப்பிடத்தக்களவு நிதியை வழங்கிவரும் ஜே.வி.பி.யின் ஜப்பான் கிளை
விமல் வீரவன்சவின் வெளியேற்றத்தையடுத்து இரண்டாகப் பிளவுபட்டுள்ளது.


இதன் மூலம் ஜே.வி.பி.யின் வருமானம் பெருமளவுக்குப் பாதிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் ஐரோப்பிய கிளைகளில் உருவாகியுள்ள குழப்பத்தை முடிவுக்குக் கொண்டுவரவேண்டிய அவசரத் தேவை ஜே.வி.பி. தலைமைக்கு இப்போது ஏற்பட்டிருக்கின்றது.

http://www.nitharsanam.com/?art=25100

No comments: