Saturday 31 May 2008

கனவிலும் தோண்றாத கொடுரம் - தமிழ் குழுந்தைகள் மரணம் பெற்றோர் கைது!!!

தெற்கு லண்டனில் கார்ல்ஸ்ரன் பகுதியில் இரு சகோதரங்கள் கத்தியால் குத்தப்பட்டு கொல்லப்பட்டு உள்ளனர். இவர்களின் இன்னும்மொரு சகோதரன் கத்திக் குத்துக்கு ஆளாகி உள்ளார்.

இது தொடர்பாக இக்குழந்தைகளின் பெற்றோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இச்சம்பவம் நேற்று (மே 30) இரவு 10:30 மணியளவில் இடம்பெற்று உள்ளது. 5 வயது மகனும் நான்கு வயது மகளும் கத்திக் குத்துக்கு இலக்காகி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

ஆனால் அவ்விரு குழந்தைகளும் உயிருக்காகப் போராடி நடு இரவளவில் உயிரிழந்தனர். அவர்களுடைய 6 மாதமே ஆன குழந்தைச் சகோதரி இன்னமும் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் தொடர்பாக இக்குழந்தைகளின் பெற்றோர் 39 வயதான தந்தையும் 35 வயதான தாயும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இச்சம்பவம் பற்றி இக்குடும்பத்தினரது உறவினர் ஒருவர் தெரிவிக்கையில் தாயே குழந்தைகளை குத்திவிட்டு பொலிஸாருக்கு தகவல் கொடுத்ததாகத் தெரிவித்தார். அண்மைக் காலத்தில் அவர் மனநிலை பாதிக்கப்பட்டு இருந்திருக்கலாம் என்றே தாங்கள் நம்புவதாகவும் அவர் கூறினார்.

தற்போது அமைதியான கிராமப் புறமான அவர்கள் வாழ்ந்த வீட்டில் மரண விசாரணைக் குழுவினரும் சிறுவர் துஸ்பிரயோக விசாரணைக் குழுவினரும் விசாரணைகளில் ஈடுபட்டு உள்ளனர்.

இன்று காலை மருத்துவநிலைப்படி ஆறு மாதப் பெண்குழந்தையின் உடல்நிலை தேறிவருவதாக அறியமுடிகிறது.

அயலவரின் தகவல்படி இலங்கையைச் சேர்ந்த தமிழர்களான இவர்கள் ஒரு வருடத்திற்கு முன்னரே அவ்வீட்டிற்கு குடிபெயர்ந்து உள்ளதாகத் தெரிகிறது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து 10 வரையா அம்புலன்ஸ் வண்டிகள் நேற்று அவ்வீட்டிற்கு வந்ததாக அயலவர்கள் கூறுகிறார்கள்.

இறந்த குழந்தைகளின் பிரேத பரிசோதணைகள் இன்று அல்லது நாளை நடைபெறும்.

No comments: