Friday 30 May 2008

2009ஆம் ஆண்டு தேர்தல் ஆண்டாக இருக்கும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

2009ஆம் ஆண்டு தேர்தல் ஆண்டாக இருக்கும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

அதனால் தேர்தலுக்கு தயாரான நிலையில் இருக்குமாறும் அவர் செயற்குழு உறுப்பினர்களை கேட்டுக்கொண்டார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம், அதன் தலைவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தலைமையில் அலரி மாளிகையில் நேற்றிரவு இடம்பெற்றது. மாகாண சபைகளில் பதவி காலம் 2009ஆம் ஆண்டு முடிவடைவதுடன் நாடாளுமன்றத்தின் பதவி காலம் 2010ஆம் ஆண்டு முடிவடைகிறது.

இந்த நிலையில் வெற்றிடமாக உள்ள கட்சியின் பிராந்திய அமைப்பாளர்களுக்கான பதவிக்குரியவர்களை நியமிக்குமாறும் கட்சியின் செயலாளர் அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவிடம் ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார்.

No comments: