Saturday 31 May 2008

கடற்புலிகளின் மற்றுமோரு அதிர்சி தரையிறக்கம்-வீரகேசரி சுபத்திரா

யாழ்ப்பாண நகருக்கு மிக நெருக்கமாக உள்ள சிறுத்தீவில் கடற்புலிகளின் விசேட கொமாண்டோ அணியினர் நடத்தியிருக்கும் தாக்குதல் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்திருக் கிறது. கடந்த வியாழனன்று (29) அதிகாலை 1.25 மணியளவில் சிறுத்தீவில் தரையிறங்கிய கடற்புலிகள் அங்கிருந்த இராணுவ கடற்படை கூட்டு அவதானிப்பு நிலையத் தைத் தாக்கிய ழித்து அங்கிருந்த ஆயுத தளபாடங்களுடன் தப்பிச் சென்றிருக்கின்றனர்.

பூநகரியில் இருந்து எட்டு படகுகளில் யாழ்.

கடனீரேரியினுள் பிரவேசித்த கடற்புலிகள் மண்டைதீவில் உள்ள கடற்படையின் "வேலு சுமண' என்ற பாரிய தளத்தைக் கடந்து சென்றே இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கின்ற னர். சிறுத்தீவு என்பது யாழ். நகருக்கும் மண் டைதீவுக்கும் இடையில் உள்ள சிறியதொரு தீவாகும். யாழ்.நகரில் கோட்டைப் பகுதியில் இருந்து சுமார் ஒரு கிலோமீற்றர் தொலைவி லேயே இது இருக்கிறது.

மக்கள் வசிக்காத இந்தத் தீவில் சிறியதொரு கத்தோலிக்க தேவாலயம் மட்டுமே இருக்கி றது. ஆண்டுக்கொருமுறை நடைபெறும் திரு விழாவுக்குத் தான் இங்கு மக்கள் செல்வர்.

அதேவேளை யாழ்.கடலேரியில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் இந்தத் தீவில் தங்கி ஓய் வெடுப்பது வழமை.

மண்டைதீவில் உள்ள கடற்படையின் பாரிய சிறுத்தீவில் பலமான பாதுகாப்பு ஏற்பாடுகள், நவீன 50 கலிபர் துப்பாக்கிகள், மோட்டார்கள் போன்ற ஆயுதங்கள், ரேடர் கண்காணிப்பு நிலை என்பன அமைக்கப்பட்டன.

மண்டைதீவு நோக்கி தாக்குதல் நடத்தப்பட் டால் அதை முறியடிக்கவும், யாழ். நகருக்கான மேலதிக பாதுகாப்பை உறுதிப்படுதவுமே சிறுத்தீவில் பலமான பாதுகாப்பு நிலைகள் அமைக்கப்பட்டன. இந்த கூட்டு அவதானிப்பு தளத்தில் கடற்படை மற்றும் இராணுவத்தைச் சேர்ந்த இரண்டு சிறிய படைப்பிரிவுகள் தங்கி யிருந்தன. யாழ். நகருக்கு மிகவும் அருகி லேயே அதாவது யாழ். நகர கரையோரப் பகுதிகளில் நடமாடுவோரை வெற்றுக் கண் ணால் அவதானிக்கக் கூடியளவுக்கு அருகி லேயே இந்த சிறுத்தீவு அமைந்துள்ளது.

பதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா போன் றோர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

சிறுத்தீவில் இருந்து இராணுவத்தினர் சிறிய படகுகள் மூலம் கோட்டையை அண்டிய பகுதி களில் தரையிறங்கி முற்றுகையை முறியடித் துப் படையினரை மீட்பதே இந்தத் திட்டம்.

ஆனால் இந்த திட்டத்தை முறியடித்த புலிகள் 25 இற்கும் அதிகமான படையினரைக் கொன்று விமானப்படையின் சியாமாச்செட்டி குண்டுவீச்சு விமானத்தையும் சுட்டு வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

கோட்டை முற்றுகையை முறியடிக்க பிரதான தாக்குதல் மையமாக இருந்த சிறுத்தீவில் இருந்த கடற் படை இராணுவக் கூட்டு அவதா னிப்பு நிலையமே கடற்புலிகளால் தாக்கப்பட்டு அழிக்கப்பட்டிருக்கிறது.

இந்தளவுக்கும் படையினர் கடலேரிப் பகுதியில் புலிகளின் ஊடுருவலைத் தடுக்க சிறுத்தீவு, மண்டைதீவு, வேலணை, கிளாலி போன்ற இடங்க ளில் பல ரேடர் அவதானிப்பு நிலை யங்களை அமைத்திருந்தனர்.

ஆனால், இந்த ரேடர் திரைகளில் படகுகளின் இயந்திரங்களின் இயக் கத்தைக் கொண்டே ஊடுருவலை அவதானிக்க முடியும். ஆனால், புலி கள் படகுகளின் இயந்திரங்களை இயக்காமலே ஒரு தொகுதி போராளி களை தரையிறங்கியிருக்கின்றனர்.

இரண்டு படகுகளில் சென்ற புலிகள் தரையிறங்கிய பின்னர் ஆறு அதிவே கப் படகுகளில் சென்ற மேலும் ஒரு தொகுதிப் புலிகள் தாக்குதலைத் தொடுத்து படையினருக்குப் பேரதிர்ச்சியைக் கொடுத் திருக்கின்றனர்.

இரண்டாவது தொகுதி படகுகள் பூநகரியில் இருந்து புறப்பட்டதுமே யாழ். கரையோரப் பகுதிகளில் நிறுத்தப்பட்டிருந்த டாங்கிகளில் தளத்துக்குப் பாதுகாப்பாக இந்தத் தீவிலும் படையினர் கண்காணிப்பு நிலைகளை அமைத்து தங்கியிருந்தனர். கடந்த 2006 ஓகஸ்ட் 11ஆம் திகதி புலிகள் மண்டைதீவில் தரையிறங்கி அல்லைப்பிட்டி வரை முன்னே றிச் சென்றிருந்தனர். பின்னர் புலிகள் அங்கி ருந்து பின்வாங்கியதை அடுத்து தீவகத்தின் பாதுகாப்பில் படைத்தலைமை கூடுதல் அக்கறை செலுத்தி வந்தது. குறிப்பாக, மண் டைதீவின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இதன் காரணமாக 1990ஆம் ஆண்டு யாழ்.

கோட்டையைப் புலிகள் முற்றுகையிட்டிருந்த போது, தீவகத்தில் இருந்து உதவி மீட்பு நட வடிக்கை ஒன்றை அப்போதைய வடபகுதி இராணுவத் தளபதியான மேஜர் ஜெனரல் டென்ஸில் கொப்பேகடுவ மேற்கொண்டார்.

தற்போதைய பாதுகாப்பு செயலரும் அப் போது லெப். கேணலாக இருந்தவருமான கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் இராணுவத் தள இருந்தும் யாழ். நகரப் பகுதியில் உள்ள பல் குழல் பீரங்கி நிலையில் இருந்தும் மற்றும் குடாநாட்டில் உள்ள பல்வேறு ஆட்டிலறி தளங்களில் இருந்தும் கடலேரியை நோக்கி உக்கிரமான தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

ஆனால் இந்தத் தாக்குதல்களுக்கு மத்தியில் கடற்புலிகள் சிறுத்தீவில் தரையிறங்கி சுமார் 35 நிமிடச் சமரையடுத்து அதிகாலை 2மணியள வில் அந்தத் தளத்தைக் கைப்பற்றினர். அங்கி யடித்து விட்டதாக தெரிவித்துள்ளது. ஆனால் சிறுத்தீவைக் கைப்பற்றி நிலைகொள்வது அவர்களின் இலக்காக இருந்திருக்க வாய் பில்லை. அப்படி நிலை கொள்வதைப் போன்ற ஆபத்தான விடயம் வேறேதும் இருக் கவும் முடியாது. புலிகளின் ஒரு படகைத் தாம் மூழ்கடித்து விட்டதாகவும் மேலும் மூன்று பட குகள் தமது ஆட்டிலறித் தாக்குதல்களில் சேத முற்றதாகவும் தெரிவித்திருக்கும் படைத்தரப்பு புலிகள் தரப்பில் 15 பேர் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளது.

அதேவேளை சிறுத்தீவில் தரையிறங்கிய பின்னர் படையினரின் ஷெல் தாக்குதலில் பலத்த சேதமுற்ற டிங்கி படகு ஒன்றைப் புலி கள் சிறுத்தீவில் கைவிட்டுச் சென்றிருப்பதாகத் தெரியவருகிறது. இந்தத் தாக்குதலில் கடற் படை யினர் இருவரும், இராணுவத்தினர் இரு வருமாக மொத்தம் 4 படையினர் கொல்லப் பட்டு 3 பேர் காயமுற்றதாகப் படைத்தரப்பு தெரிவித்துள்ளது. கடற்படைப் பேச்சாளர் புலிகள் பெரியளவில் ஆயுதங்கள் எதையும் எடுத்துச் செல்லவில்லை என்றும் சிறுத்தீவில் ருந்த 3 படையினரின் சடலங்களையும்,பெருமளவு ஆயதங்கள், ரேடர் என்பன வற்றையும் புலிகள் அள்ளிக் கொண்டு சென்று விட்டனர். ஓரிரு மணிநேரத் துக்குள் புலிகளின் அணிகள் பூநகரிக்குத் திரும் பிவிட்டன. தமது தரப்பில் எவ்வித இழப்பும் ஏற்படவில்லை என்றும் படையினர் தரப்பில் 13பேர் கொல்லப்பட்டதாகவும் புலிகள் அறி வித்துள்ளனர்.

அதேவேளை படைத்தரப்போ புலிகள் சிறுத்தீவில் ஊடுருவ எடுத்த முயற்சியை குறி ரேடர் நிலையே இருக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். ஆனால் புலிகள் தாம் கைப்பற் றிய ஆயுதங்களை கிளிநொச்சியில் செய்தியாளர்களுக்கு காண்பித்ததுடன் அதுபற்றிய படங் கள் தமிழ்நெட் இணையத்தளத்திலும் வெளி வந்திருந்தன.

ரேடர்01, 50கலிபர் துப்பாக்கி01, ஆர்பிடி எல்எம்ஜி01, ஏகே எல்எம்ஜி01, 60மி.மீ மோட்டார்01, 40மி.மீ றொக்கட் லோஞ்சர் 01, ரி56 துப்பாக்கிகள்04, 60மி.மீ ஷெல் 141 மற்றும் பல்வேறு வெடிபொருட்கள், ரவைகள், படைத்ள பாடங்கள் என்பன வற்றைப் புலிகள் கைப்பற்றியதாக தெரிவித்துள்ளனர். புலிகள் கைப்பற்றிய ஆயுதங்கள் அவர்களிடம் முன்னரே உள்ள வகைகளைச் சேர்ந்தவையே என்பதால் இதனால் எந்தத்தாக்கமும் புதிதாக ஏற்பட்டு விடப்போவதில்லை.

ஆனால், கடற்புலிகள் சிறுத்தீவு வரை ஊடு ருவி வந்து தாக்குதலை நடத்தி படையினரின் சடலங்களோடு தப்பிச் செல்லும் அளவுக்கு பாதுகாப்பு குறைபாடுகள் இருந்திருக்கிறதே என்பதுதான் படைத்தரப்புக்கு சங்கடமான விடயம். கடற்புலிகள் கடந்த வருடம் மே மாதத்தில் நெடுந்தீவில் உள்ள "குயின்ராக்' கடற்படை அவதானிப்பு நிலையை தாக்கிய ழித்திருந்தனர். 1991ஆம் ஆண்டில் கடற்புலி கள் சிறியளவில் இயங்கத் தொடங்கியபோது பூநகரியில் இருந்த இராணுவத் தளத்துக்கு துணையாக யாழ். கடலேரியில் உள்ள மான் தீவில் இருந்த இராணுவக் காவலரணை அழித் திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நெடுந்தீவுத் தாக்குதலுக்குப் பின்னர் கடற் புலிகள் கடற்படைப் படகுகளை இலக்கு வைத்து சில தாக்குதல்களை நடத்தியிருந்தனர்.

கடந்த மாதத் தொடக்கத்தில் மன்னார்தீவில் கொந்தாப்பிட்டியில் இருந்த கடற்படைக் காவலரணையும் கடற்புலிகள் படகுகளில் சென்று தாக்கி ஒரு படைச் சிப்பாயின் சடலம் மற்றும் ஆயுதங்களுடன் திரும்பிச் சென்றிரு தனர்.

கடற்புலிகள் இத்தகைய கொமாண்டோ தாக் குதல்களை தொடர்ந்து நடத்தப் போகின்றனரா என்ற கேள்வியை, தொடர்ச்சியாக நடந்து வரும் இந்தத் தாக்குதல்கள் எழுப்பியிருகின் றன. அதேவேளை, யாழ்ப்பாணத்தின் பாது காப்பு பற்றி பெரும் பிரசாரம் முன்னெடுக்கப் பட்ட நிலையில் நகருக்கு அருகே வரை புலிகள் வந்து சென்றது பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியிருப்பதுடன், பாதுகாப்பில் உள்ள ஓட்டைகளையும் இனங்காட்டியிருக்கிறது.

No comments: