Saturday 31 May 2008

அம்பாறை தங்கவேலாயுதபுரத்தில் மக்களின் வீடுகளை உடைத்து உடைமைகளை சூறையாடும் படையினர்

அம்பாறை தங்கவேலாயுதபுரம் கிராமத்தில் இருக்கும் மக்களுடைய வீடுகளை உடைத்து நிலைகள், கதவுகள், ஓடுகள் என்பவற்றை சிறிலங்கா விசேட அதிரடிப்படையினர் எடுத்துச்சென்றுள்ளனர்.

இந்த மக்களினுடைய உடைமைகள் உடைத்து எடுக்கப்பட்டு தாண்டியடி காஞ்சிரங்குடா அதிரடிப்படை முகாமிற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
அப்பகுதி மக்களின் உழவு இயந்திரங்களை பலவந்தமாகப் பறித்து அவ் உழவு இயந்திரங்களிலே ஏற்றிச்செல்கின்றனர்.

இதனால் மக்கள் மத்தியில் பெரும் பதற்றநிலைமை தோன்றியுள்ளது.

2006 ஆம் ஆண்டு முற்பகுதியில் சிறிலங்கா விசேட அதிரடிப்படையினரின் இப்படியான அடாவடித்தனத்தினால் தங்கவேலாயுதபுரம் கிராமத்திலிருந்து வெளியேறி விநாயகபுரம், திருக்கோவில் ஆகிய பகுதிகளில் வசித்துவந்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவம் நேற்றும் இன்றும் இடம்பெற்றுள்ளது.

No comments: