Thursday 29 May 2008

வெடி மருந்துகளுடன் பௌத்த பிக்கு ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வெடி மருந்துகளுடன் பௌத்த பிக்கு ஒருவர் இன்று (மே29) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
தென் மாகாணத்திற்கான அதிவேக பாதை அமைக்கப்பட்டு வரும், பிரதேசம் ஒன்றில் உள்ள விகாரையில் இருந்து இந்த வெடிப் மருந்துகள் மீட்க்கப்பட்டதாக காலி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பத்தேகம திலக உதாகம என்ற பகுதியில் உள்ள விகாரையில் இருந்து 43 கிலோ கிராம் டயமையிட் மற்றும் 233 கிலோ கிராம் ஆமோனியம் ஜதரட்டு மற்றும் 22 கிலோ கிராம் கல்வெடிகள் வெடி மருந்துகள் மீட்கப்பட்டுள்ளன.

மீனவர்களுக்கு இந்த வெடி மருந்துகள் விற்பனை செய்யப்பட்டு வந்தாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

No comments: