Saturday 31 May 2008

இத்தாலி நாட்டில் தொழில் பெற்றுத் தருவதாக கூறி சுமார் ஐம்பது லட்சம் ருபாவை மோசடி செய்ததாகக் கருதப்படும் ஹங்குராங் கெத்தையைச் சேர்ந்த போலி ஏஜண்ட் கைது

இத்தாலி நாட்டில் தொழில் பெற்றுத் தருவதாக கூறி சுமார் ஐம்பது லட்சம் ருபாவை மோசடி செய்ததாகக் கருதப்படும் ஹங்குராங்கெத்தையைச் சேர்ந்த போலி ஏஜண்ட் ஒருவர் பொலீசாரினால் 29ம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார்.

கண்டி பொலீஸ் நிலையத்தில் இது தொடர்பாக ஹங்குராங்கெத்தையைச் சேர்ந்த நபர் ஒருவர் செய்த முறைப்பாட்டையடுத்தே பொலீசார் மேற்படி போலி ஏஜண்டைக் கைது செய்துள்ளனர்.

இவர் பத்து நபர்களிடம் இதேபோன்று பண மோசடி செய்திருப்பதாக விசாரணை மூலம் தெரியவந்துள்ளது. சந்தேகநபர் கண்டி மஜிஸ்ரேட் முன்னிலையில் இவர் ஆஜர் செய்யப்பட்ட பின்னர் எதிர்வரும் 6ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

No comments: