Saturday, 5 July 2008

வடக்கு கிழக்கில் 135 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன

வடக்கு கிழக்கு மாகாணங்களில் இதுவரை 138 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக வடக்கு கிழக்கு மாகாண கல்வி திணைக்கள புள்ளி விபரங்களிலிருந்து தெரியவருகின்றது.

விபரம் வருமாறு:
யாழ் மாவட்டத்தில் 417 பாடசாலைகள் செயல்படுகின்றன. அவற்றுள் 75 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.

கிளிநொச்சி மாவட்டத்தில் 96 பாடசாலைகள் செயல்படுகின்றன. அவற்றுள் 03 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.

முல்லைத் தீவு மாவட்டத்தில் 102 பாடசாலைகள் செயல்படுகின்றன. அவற்றுள் 04 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.

மன்னார் மாவட்டத்தில் 105 பாடசாலைகள் செயல்படுகின்றன. அவற்றுள் 18 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.

வவுனியா மாவட்டத்தில் 187 பாடசாலைகள் செயல்படுகின்றன. அவற்றுள் 06 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.

திருகோணமலை மாவட்டத்தில் 262 பாடசாலைகள் செயல்படுகின்றன. அவற்றுள் 19 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 321 பாடசாலைகள் செயல்படுகின்றன. அவற்றுள் 09 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.

அம்பாறை மாவட்டத்தில் 389 பாடசாலைகள் செயல்படுகின்றன. அவற்றுள் 04 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.

No comments: