இந்தியா, 1974ம் ஆண்டு உலகமே வியக்கும் வண்ணம் அணுகுண்டு சோதனையை நடத்தியது. அதன்பின்னர் 1994ம் ஆண்டு பொக்ரானில் அணுகுண்டு சோதனையை நடத்த திட்ட மிட்டிருந்ததாகவும், ஆனால் அமெரிக்காவின் நிர்பந்தம் காரணமாக, இத்திட்டம் கைவிடப்பட்டதாக, அணுசக்தி விஞ்ஞானி திரு.சந்தானம் திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார். அணுகுண்டு சோதனை முயற்சி அமெரிக்க செயற்கைக் கோள்களால் உளவு பார்க்கப்பட்டதாக தெரிவித்துள்ள விஞ்ஞானி திரு.சந்தானம், உடனடியாக அப்போதைய அதிபர் கிளிண்டன், பிரதமர் நரசிம்மராவை தொடர்பு கொண்டு இந்த திட்டத்தை நிறுத்தும்படி நிர்பந்தித்ததாகவும் தெரிவித்துள்ளார். இதன்பின்னர் திரு. வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில், 1998ம் ஆண்டு பொக்ரானில் அணுகுண்டு சோதனைகள் இருமுறை நடத்தப்பட்டதாகவும் விஞ்ஞானி திரு.சந்தானம் கூறியுள்ளார். அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் இன்னும் செயல்படுத்தப்படாத நிலையில் இந்த புதிய தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Wednesday, 2 April 2008
இந்தியா 1994ம் ஆண்டில் திட்டமிட்டிருந்த அணுகுண்டு சோதனை, அமெரிக்காவின் நிர்பந்தத்தால் கைவிடப்பட்டதாக, அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment