Saturday, 19 April 2008

மடுமாதா திருச்சொருபம்: தொடர்கிறது சர்ச்சை:

மடு மாதா திருச்சொரூபத்தை மீண்டும் மடு தேவாலயத்திற்கு எடுத்து வரவேண்டும் என கோரப்பட்டுள்ளது.

இலங்கைக்கான இத்தாலிய தூதுவர் ஹேமந்த வர்ணக்குலசூரிய, இது தொடர்பிலான கோரிக்கையை முன்வைத்துள்ளார். இத்தாலி நகரில் நேற்று ஊடகவியலாளர்கள் சந்திப்பை நடத்திய அவர,;

இந்த கோரிக்கையை பாப்பரசர் 16 ஆம் ஆசிர்வாதப்பரிடம் முன்வைத்துள்ளதாக குறிப்பிட்டாh.;; நேற்றைய தினம் மன்னாரிலும் சர்வமதங்களையும் சேர்ந்தவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

மடு தேவாலையப் பகுதி சமாதான வலையமாகப் பிரகடணப்படுத்தப்பட வேண்டும் எனவும், நாட்டிற்கு சாந்தி சமாதானம் ஏற்படவேண்டும் எனவும் இங்கு வலியுறுத்தப்பட்டு இருந்தது. ஏற்கனவே மடு தேவலையப் பகுதி குறித்த மஜர் ஒன்று விடுதலைப்புலிகளிடமும், அரசாங்கத்திடமும் கையளிக்கப்பட்டுள்மை குறிப்படத்தக்கது.

No comments: