இலங்கையின் மனித உரிமைகள் நிலைமையை அறிக்கையிடுவதற்கென ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அலுவலகம் ஒன்றை அமைப்பதை தாம் வரவேற்பதாக கனடா தெரிவித்துள்ளது. தெற்காசியாவில் பன்மைத்துவம்’ என்ற தலைப்பில் கனேடிய அரசாங்கம் தேசிய சமாதான பேரவையுடன் இணைந்து நடத்திய பிராந்திய மாநாடு ஒன்று கொழும்பில் அண்மையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் இலங்கையின் இனப்பிரச்சினை குறித்து கலந்துரையாடப்பட்டபோதே கனேடிய உயர்ஸ்தானிகர் இந்த கருத்தை வெளியிட்டார். இலங்கையில் நிலவும் யுத்தநிலைமை தொடர்பில், அங்கு பணியாற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மனித உரிமைகளைப் பேணும் அமைப்புக்கள் மற்றும்; பொதுமக்களில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து கனடா கவனம் செலுத்துவதாக அவர் குறிப்பிடப்பட்டார். சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் அறிக்கையின் படி, மோதல்கள் காரணமாக 2008 ம் ஆண்டின் முதல் 6 வாரங்களில் மாத்திரம் 180 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், 270 பேர் காயமடைந்துள்ளனர். இதன் காரணமாக மனித உரிமைகளை மதித்து, அரசியல் தீர்வொன்றை அடைவதற்கு மோதலில் ஈடுபட்டுள்ள இரண்டு தரப்பினருக்கும் கனடா அழைப்பு விடுப்பதாக உயர்ஸ்தானிகர் அழைப்பு விடுத்தார். குறிப்பாக சிறுவர்கள் மீதான வன்முறைகளை தாம் எதிர்ப்பதாக தெரிவித்த அவர் தமிழீழ விடுதலைப்புலிகள் மற்றும் பிள்ளையான் அமைப்பு ஆகியன தம்மிடமுள்ள சிறுவர்களை விடுவிக்க வேண்டும் என கனேடிய அரசாங்கம் கோரிக்கை விடுப்பதாக தெரிவித்தார். அதிகார பரவலாக்கத்தை அடிப்படையாகக் கொண்ட, அனைத்து மக்களாலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய நிலைத்திருக்கக்கூடிய சமாதானத்தை அடைவதற்கான அரசியல் தீர்வொன்றை எட்டுவதற்கு இரண்டு தரப்பினரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என அவர் கேரிக்கை விடுத்தார். பன்மைத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட சிறுபான்மையினரின் உரிமைகளுக்கு இடமளிக்கக்கூடிய கனடாவின் அரசியல்முறைமையை ஒத்த மாதிரியை இலங்கை இனப்பிரச்சினைக்குத் தீர்வாகக் கொள்ளமுடியும் என்றும் அவர் ஆலோசனை வழங்கினாh.;
Wednesday, 2 April 2008
கனனேடிய அதிகாரப்பகிர்வு முறை இலங்கைக்கு பொருந்தும் என கனேடிய் உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment