அமெரிக்காவை தாக்குவதற்காக, அணு ஆயுதத் தொழில் நுட்பத்தை அல் காய்தா பயங்கரவாத அமைப்பு வாங்க விரும்பியது என்ற தகவலை அமெரிக்க உளவுத்துறை வெளியிட்டுள்ளது.
தங்கள் பாதுகாப்புக்காக அணு ஆயுதத் தொழில்நுட்பத்தை பெற பல நாடுகள் விரும்புகின்றன. ஆனால் அணு ஆயுதத் தாக்குதல் நடத்த அல் காய்தா பயங்கரவாதிகள் விரும்பினர். அதற்காக அணு ஆயுதத் தொழில்நுட்பத்தை எப்படியாவது பெற வேண்டும் என்பதே அவர்களது திட்டம் என்று அமெரிக்க உளவுத்துறை மூத்த அதிகாரி சார்லல் ஆலன் அமெரிக்க எம்.பி.க்களிடம் தெரிவித்தார். அல் காய்தா பயங்கரவாதிகள், அமெரிக்காவைத் தாக்கும் பல திட்டங்களில் அணு ஆயுதத் தாக்குதலும் ஒன்று. நியூயார்க்கில் பல மாடிக் கட்டடத்தில் விமானத்தை மோதி தகர்த்தனர் அல் காய்தா அமைப்பினர். அத்தாக்குதலில் மிகச் சிலர் மட்டுமே ஈடுபட்டனர். அதுபோல அணு ஆயுதத் தாக்குதலிலும் அந்த இயக்கத்தைச் சேர்ந்த மிகச் சிலர் மட்டுமே ஈடுபடுவர். அணு ஆயுதத் தொழில் நுட்பத்தைப் பெறுவதற்காக ஏற்கெனவே சில வல்லுநர்கள் அந்த இயக்கத்தில் சேர்ந்திருக்கக் கூடும். எனவே நாம் இதுவரை சந்திக்காத புதிய வழியில் தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளது. அதைக் கண்டுபிடித்துத் தடுக்க வேண்டியது நம் கடமை என்றார் அவர். அணுவைப் பிளக்கும் கருவி இல்லாமல் அணு ஆயுதம் தயாரிக்க முடியாது. எனவே அல் காய்தா தீவிரவாதிகள், அணு ஆயுதத்தைத் திருடியோ அல்லது யாரிடமாவது கள்ளத்தனமாக வாங்கியோ அதை அவர்கள் பயன்படுத்தக் கூடும் என்றார்.
Saturday, 5 April 2008
அணு ஆயுதத் தாக்குதல் நடத்த அல் காய்தா திட்டம்: யு.எஸ். தகவல்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment