Saturday, 5 April 2008

ருபவாஹினி மேலதிகப் பணிப்பாளரின் பணி இடைநிறுத்தம்.

ருபவாஹினிக் கூட்டுத்தாபனத்தில் ஒளிபரப்புச் செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஸவின் ‘கிருசந்து அருண’ நிகழ்ச்சியின் டி.வி.டி. பிரதியொன்றை ரூபவாஹினி மேலதிகப் பணிப்பாளர் வழங்கினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அவரது பணி ,டைநிறுத்தப்பட்டுள்ளது.
இலங்கை ருபவாஹினிக் கூட்டுத்தாபனத் தலைவரினால் ,ந்த பணி இடைநிறுத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விஜயதாஸ ராஜபக்ஸவினால் எழுதப்பட்ட பாடல்கள் அடங்கிய ஒளிநாடா, ,றுவட்டு மற்றும் 8 புத்தகங்கள் ஆகியவற்றின் வெளியீட்டு விழா கடந்த பெப்ரவரி 6ம் திகதி பத்தரமுல்லவில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்க, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஆர். சம்பந்தன் ஆகியோர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வையொட்டி இரண்டு மணிநேர நிகழ்ச்சியொன்றை ராஜபக்ஸ தயாரித்துள்ளதுடன், இதனை ருபவாஹினியில் ஒளிபரப்புச் செய்ய இணக்கம் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ராஜபக்ஸவினால் தயாரிப்பப்பட்ட இந்த நிகழ்ச்சி கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி ஒளிபரப்புச் செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்புச் செய்வதற்காக 6,32,000 ரூபாவை இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்திற்கு விஜயதாஸ ராஜபக்ஸ கட்டணமாக செலுத்தியுள்ளார்.
இரண்டு மணித்தியால ஒளிப்பரப்பிற்காகவே இந்த பணம் செலுத்தப்பட்டுள்ளது. எனினும், இந்த நிகழ்ச்சி மீள்தொகுப்பு செய்யப்பட்டு ஒன்றரை மணித்தியாலங்கள் மாத்திரமே ஒளிபரப்புச் செய்யப்பட்டிருந்தது.
சுமார் இரண்டு மணித்தியாலம் ஒளிபரப்பு செய்வதாக ஒப்பந்தம் செய்யப்பட்டு, 1.15 மணித்தியாலங்களே குறித்த நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது.
கூட்டுத்தாபன தலைவரினால் தொகுக்கப்பட்ட நிகழ்ச்சிப்பிரதியை பார்ப்பதற்காக 22 தடவைகள் தலைவருக்கு தொலைபேசி அழைப்பு ஏற்படுத்தப்பட்டதாகவும் எனினும், அவர் பதிலளிக்கவில்லை எனவும் பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
எனினும், பிரதான விருந்தினர்களாக வருகை தந்திருந்த எதிர்க்கட்சித் தலைவர், ஆர்.சம்பந்தன், சபாநாயகர் ஆகியோரின் விரிவுரைகள் நீக்கப்பட்டிருந்தது.
மேலும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா மற்றும் மங்கள சமரவீர ஆகியோரின் முகங்களைக் கூட ,ந்த நிகழ்ச்சியில் காண்பிக்கவில்லை எனத் தெரியவருகிறது.
இதற்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க உள்ளதாக விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்தார்.
மேலும், நிகழ்ச்சி தொடர்பான டி.வி.டியை வழங்கிய மேலதிக பணிப்பாளர் நாயகத்தின் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சி தொடர்பான டி.வி.டியைப் பெற்றுக்கொள்ள 20,900 ரூபா பணம் செலுத்தப்பட்டுள்ளதாக விஜயதாஸ ராஜபக்ஸ தெரிவித்தார்.
எனினும், பணம் கொடுப்பதனூடாக எவருக்கும் நிகழ்ச்சிகளை பிரதிகிளைப் பெற்றுக்கொள்ள முடியும் என ரூபவாஹினி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments: