பயங்கரவாத்தை தோற்கடிக்கும் வரை மக்கள் பட்டினியை தாங்கிக் கொண்டிருப்பார்கள் என பெருந் தெருக்கள் அபிவிருத்தி அமைச்சர் ஜெயராஜ் பெர்ணான்டேபுள்ளே தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தற்போது பொருட்களின் விலைகள் வான் உயரத்திற்கு உயர்ந்துள்ளன. 76ஆம் 77ஆம் ஆண்டுகளில் பொருட்களில் விலை அதிகரிப்பால் மக்கள் அரசாங்கத்தை கவிழ்த்தனர். தற்போது அரிசி, மா சீனி போன்றவற்றின் விலைகள் எவ்வளவு அதிகரித்தாலும் பயங்கரவாத்தை உரிய முறையில் எதிர்கொண்டு யுத்ததை வெற்றிகரமாக முன்னெடுத்து செல்வதால் மக்கள் பட்டினியை பொறுத்துகொண்டு இருக்கின்றனர். அரிசியின் விலை 35 ரூபாவில் இருந்து 70 ரூபாயாக அதிகரித்துள்ளது. நூற்றுக்கு நூறு விதம் அதிகரிக்கப்பட்டடும் மக்கள் ஊர்வலங்கள் செல்லவில்லை என அமைச்சர் ஜெயராஜ் பெர்ணான்டேபுள்ளே தெரிவித்தார். மணிலாவில் அரிசி விலை அதிகாரித்ததால் ஜனாதிபதியை பதவி விலகுமாறு கோரி ஊர்வலம் செல்கின்றனர். ஒரு மாதம் இரண்டு மாதம் அல்லது ஒருவருடம் பட்டினியில் இருந்தாலும், இந்த நாட்டை பயங்கரவாதத்தில் இருந்த மீட்க ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ செயற்பாடுகளை முன்னெடுக்கிறார் என்பதை மக்கள் அறிந்துள்ளனர். எனவும் அவர் கூறியுள்ளார்.
Saturday, 5 April 2008
பட்டினி இருந்தாலும் பயங்கரவாதத்தை ஒழிக்க மக்கள் துணை புரிவர் என்கிறார் அமைச்சர் ஜெயராஜ் பெனான்டோபுள்ளே.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment