Thursday, 10 April 2008

ஆயுத ஊழல் விசாரணையை கைவிட்டது சட்டவிரோதமானது ; லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு

பிரிட்டன் தயாராகும் போர் விமானங்கள்
பிரிட்டனில் தயாராகும் போர் விமானங்கள்
சவுதி அரேபியாவுக்கும், பிரிட்டனுக்கும் இடையிலான பாரிய ஆயுத வணிகம் ஒன்றில் ஊழல் இடம்பெற்றதாகக் கூறப்படுவதை புலன் விசாரணை செய்வதை கைவிடுவதற்கான, பிரித்தானிய கடுமையான மோசடிகளை கையாளுவதற்கான அலுவலகத்தின் முடிவை, சட்டவிரோதமானது என்று இங்கு லண்டனில் உள்ள மேல் நீடிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பல லட்சக்கணக்கான டாலர்கள் பெறுமதியான இந்த ஆயுத விற்பனைக்கான ஒப்பந்தத்தைப் பெறுவதற்கு உதவுவதற்காக, சவுதி அதிகாரிகளுக்கு, பிரிட்டிஷ் நிறுவனமான பி ஏ ஈ சிஸ்டம்ஸ் நிறுவனம், லஞ்சம் கொடுத்ததாகக் கூறப்பட்ட புகாரை கடுமையான மோசடிகளை கையாள்வதற்கான அலுவலகம் புலன் விசாரணை செய்து வந்தது.

அந்த அலுவலகத்தையும், பிரிட்டிஷ் அரசையும் விமர்சித்த நீதிமன்ற நீதிபதிகளில் ஒருவர், பிரிட்டனுக்கு வெளியேயோ அல்லது உள்ளேயோ இருக்கும் எவருக்கும் பிரிட்டனின் நீதித்துறையில் தலையிட உரிமை கிடையாது என்றார்.

2006 ஆம் ஆண்டில் இந்த விசாரணை நிறுத்தப்பட்ட போது, அப்போதைய பிரதமரான டோனி பிளேர் அவர்கள், இந்த விசாரணை, பயங்கரவாதத்துக்கு எதிரான கூட்டுறவு உட்பட, பிரிட்டனின் கேந்திர ரீதியான அபிலாசைகளுக்கு, பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது என்று கூறியிருந்தார்.

No comments: