Sunday, 20 April 2008

இலங்கை இளைஞர் கொலை - இரண்டு இந்தியர் கைது.

பவானிசாகர் இலங்கை அகதி முகாமில் வசித்து வந்த 20 வயதான எம்.முரளி என்ற இளைஞரின் கொலை தொடர்பாக தமிழகத்தின் கோயம்புத்தூர் கிராமிய காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் இரண்டு பேரை கைதுசெய்துள்ளனர்.

கொள்ளையிடப்பட்ட பணத்தை பகிர்ந்து கொள்வதில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மதுரையை சேர்ந்த எம்.முத்து, ஏ. வெங்கடேஸ் ஆகியோரே கைதுசெய்யப்பட்டுள்ளனதாக கோயம்புத்தூர் காவற்துறை தெரிவித்துள்ளது.

No comments: