Tuesday 8 April 2008

தூத்துக்குடி கடற்கரைப் பகுதியில், இன்று காலை பூமிக்கு அடியில் இருந்து திடீரென்று கரும்புகை கிளம்பியதால், பொதுமக்கள் பீதியடைந்தனர்.

தூத்துக்குடி மாதா நகரில், இன்று காலை திடீரென்று பூமிக்கு அடியில் இருந்து கரும்புகை வெளிப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், தங்கள் வீடுகளில் இருந்து அலறியடித்துக் கொண்டு வெளியேறினர். இதுகுறித்து உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்பு புகை வெளிவந்த இடத்தைத் தோண்டிப் பார்த்தபோது, வெப்பத்துடன் கூடிய கரும்புகை வெளிப்பட்டது. தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த இருவரின் கைகளிலும் தீக்காயம் ஏற்பட்டது. இந்தச் சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

1 comment:

வடுவூர் குமார் said...

நிஜமாகவா!!!
பூமியில் எங்காவது பெரு வெடிப்பு ஏற்பட்டிருக்கும்??