Saturday, 5 April 2008

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இணையதளம் குறித்து அரசாங்ம் விசனம் அடைந்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களினால் ஆரம்பிக்கப்பட்ட www.tamilalliance.comஇணையதளம் குறித்து சட்ட மா அதிபர் கவனம் செலுத்தியுள்ளார். இந்த இணையதளத்தில் நாட்டை பிளவுபடுத்த சதி முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்திருப்பதாகவும், தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
தமிழீழ கோரிக்கைக்கு வித்திடுவதாக அமைந்துள்ள இந்த இணையதளம் குறித்து அரசாங்கம் சட்ட மா அதிபருக்கு முறைப்பாடு செய்ய உள்ளதாகத் தெரியவருகிறது. சட்ட மா அதிபரின் ஆலோசனைகளின்படி உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அரசாங்கத்தின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

No comments: