இலங்கையின் கிழக்கு மாகாணசபைக்கான தேர்தல் நடந்ததை அடுத்த காலகட்டத்தில் திருகோணமலை மாவட்டத்தில் மாத்திரம் 15 தமிழர்கள் காணாமல் போனதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த மாதம் 9 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 15 தமிழர்கள் திருகோணமலையில் காணாமல் போனதாக தம்மிடம் முறைப்பாடு செய்யப்பட்டுளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் திருகோணமலை மாவட்டக் கிளையின் பிராந்திய இணைப்பாளரான குளோரியா பிரான்சிஸ் தமிழோசையிடம் தெரிவித்தார்.
காணாமல் போனவர்கள் அனைவரும் 20 முதல் 30 வாயதுக்கு உட்பட்டவர்கள் என்று உறவினர்களால் தம்மிடம் முறைப்பாடு செய்யப்பட்டதாகவும், இது குறித்து தமது தலைமை அலுவலகத்துக்கும், பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கும் தான் அறிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

No comments:
Post a Comment