Friday, 23 May 2008

வடமராட்சியில் வான்குண்டுத் தாக்குதல்: 2 பொதுமக்கள் பலி- 3 பேர் காயம்

வடராட்சி கிழக்கு சுண்டிக்குளம் கற்பாட்டுப் பகுதியில் சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் நடத்திய குண்டுத்தாக்குதலில் 2 அப்பாவிப் பொதுமக்கள் உடல் சிதறி கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 3 பேர் காயமடைந்துள்ளனர்.

கற்பாடு மக்கள் குடியிருப்புக்கள் மீது இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 2:00 மணியளவில் கிபீர் வானூர்திகள் குண்டுத் தாக்குதலை நடத்தின.

இத்தாக்குதலில் அப்பகுதியில் இருந்த 10 வீடுகள் முற்றாக அழிந்தன.

வீடுகளில் இருந்த 2 அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 3 பேர் காயமடைந்துள்ளனர்.

No comments: