Wednesday, 21 May 2008

டீசலின் விலை நள்ளிரவு முதல் 20 ரூபாவினால் திடீர் அதிகரிப்பு


டீசல் விலையினை லங்கா இந்தியன் ஒயில் கம்பனி 20 ரூபாவினால் இன்று நள்ளிரவு முதல் அதிகரித்துள்ளது. 1 லீற்றர் டீசல் விலை 80 ரூபாவிலிருந்து 100 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று இந்தியன் ஒயில் கம்பனியின் முகாமைத்து இயக்குநர் கே.இராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

1 லீற்றர் டீசலுக்கு 43 ரூபா நட்டம் ஏற்படுவதனால் டீசலின் விலையினை அதிகரிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தபோதிலும் அதற்கான சாதகமான பதில் வராமையினால் தன்னிச்சையாக 1 லீற்றர் டீசலின் விலையினை 20 ரூபாவால் அதிகரிக்கவேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

1 லீற்றர் பெற்றோலுக்கு 3 ரூபா நட்டம் ஏற்பட்டு வருகின்றபோதிலும் பெற்றோலுக்கான விலையினை அதிகரிப்பது குறித்து இன்னமும் தீர்மானம் எதனையும் நாம் எடுக்கவில்லை. இது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.

No comments: