Thursday, 22 May 2008

மல்லாவியில் நோயாளர் காவு வாகனம் மீது கிளைமோர்த் தாக்குதல்: 2 பேர் பலி

கிளிநொச்சி மாவட்டம் மல்லாவியில் நோயாளார் காவு வாகனம் மீது நேற்று சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் அணியினர் நடத்திய கிளைமோர்த் தாக்குதலில் அப்பாவிப் பொதுமக்கள் இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.

வெள்ளாங்குளம் - துணுக்காய் வீதியில் நேற்று வியாழக்கிழமை இரவு 8:00 மணியளவில் இக்கிளைமோர்த் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இத்தாக்குதலில் நோயாளர் காவு வாகனத்தில் சென்ற அப்பாவிப் பொதுமக்களான யோசப் யூலியன் மற்றும் யோசப் சாந்தகுமார் ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

No comments: